HomeNewsKollywoodசிம்ஹா அனுப்பிய குறுஞ்செய்திக்கு போட்டிபோட்டு மதிப்பு கொடுத்த சிரஞ்சீவி - சிவராஜ்குமார்

சிம்ஹா அனுப்பிய குறுஞ்செய்திக்கு போட்டிபோட்டு மதிப்பு கொடுத்த சிரஞ்சீவி – சிவராஜ்குமார்

நடிகர் சிம்ஹா ஜிகர்தண்டா படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது வாங்கியவர். அதைத்தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக, வில்லனாக என தன்னைத் தேடி வரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக பேட்ட, மகான் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் தற்போது மும்மொழிகளில் வெளியாக இருக்கும் வசந்த முல்லை என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக காஸ்மீரா பரதேசி நடிக்க இந்த படத்தை ரமணன் புருஷோத்தமன் இயக்கியுள்ளார். இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் வசந்த கோகிலா என்கிற பெயரில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிம்ஹா பேசும்போது, “பத்திரிக்கையாளர்களின் கரங்களின் மூலம் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதை பெருமிதமாக கருதுகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் முதல் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான். மக்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதில் உங்களுடைய எழுத்துக்களுக்கும், கருத்துகளுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு.

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். உடனே வர சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார். தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.

சிவராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோர் இன்று இந்த உயரத்தில் இருந்தாலும், அவர்களுடைய எளிமை, விருந்தோம்பல் என்னை கவர்ந்தது. அது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ‘மகான்’ திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் வெளியானது.

இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது. தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன்” என்று கூறினார் சிம்ஹா.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments