துல்கர் சல்மானை இனி மலையாள நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்கு மலையாள திரையுலக விட தமிழ் தெலுங்கு திரையுலகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் ஆகவே மாறிவிட்ட துல்கர் சல்மான் இந்தியிலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் அவரது நடிப்பில் தெலுங்கில் உருவான சீதாராமம் திரைப்படம் மற்ற மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் அவர் கிங் ஆப் கோதை என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
பான் இந்தியா படமாக தயாராகி வரும் இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படம் வரும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.