V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்

மீண்டும் ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்ததாக அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அவர்களை பொதுமக்களுக்கான பல்வேறு நலத் திட்டப் பணிகளில் ஈடுபடும் நோக்கில் திசைத் திருப்பி விட்டார் விஜய்.

அதைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும் தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது ரசிகர்களை நேரில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் விஜய்.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தனது விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களை தான் வசிக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அனைவரையும் மகிழ்வித்தார்.

தற்போது மீண்டும் ஒரு முறை தனது ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பின்போது முன்பைவிட உற்சாகத்துடனும் ரசிகர்களுடன் மிகவும் நெருக்கம் காட்டும் விதமாகவும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் விஜய்.

அதிலும் தன்னை காண வந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தனது கைகலிலேயே தூக்கிக் கொண்டு விஜய் புகைப்படம் எடுத்த நிகழ்வு ரசிகர்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

விஜய் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இரு மொழியில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை ரிலீசாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அந்த படத்தை காண தயாராகி வரும் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் விதமாக இந்த ரசிகர்கள் சந்திப்பு அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.

Most Popular

Recent Comments