HomeNewsKollywoodரஜினி முருகனுக்கு இரண்டாம் பாகம் இருக்கு

ரஜினி முருகனுக்கு இரண்டாம் பாகம் இருக்கு

நடிகர் சிவகார்த்திகேயன் பயணத்தில் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி சென்ற படங்களில் முக்கியமானவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன். இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார்.

இந்த இரண்டு படங்களுமே சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவரது திரையுலக பயணத்தில் அவரை உச்ச நட்சத்திரமாக மாற்றும் வேலையை சரியாக செய்தது.

இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் மூன்றாவதாக சீமராஜா என்கிற படத்தில் இணைந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் ஏனோ வெற்றி பெறத் தவறியது.

இந்த நிலையில் தற்போது பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் அந்த படம் ரஜினிமுருகன் பார்ட்-2 ஆக இருக்கும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார் போன்றாம்.

ரஜினி முருகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இன்னொரு சிவகார்த்திகேயன் வருவதாக அந்த படம் முடிந்து இருக்கும். அந்த வகையில் அந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதற்கான ஒரு லீட் வைத்துத்தான் பொன்ராம் அந்த படத்தை முடித்து இருப்பார்.

அந்த சிவகார்த்திகேயன் வேறு யாருமல்ல அவர்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் போஸ் பாண்டியாக நடித்த சிவகார்த்திகேயன். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் சந்தித்துக் கொண்ட பின்னால் என்ன நிகழ்கிறது என்பதை வைத்து சுவாரசியமாக இந்த ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம் இயக்குனர் பொன்ராம்.

இந்தப்படத்தில் சூரியும் டபுள் ஆக்ட்டிங்கில் நடிக்க இருக்கிறாராம். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், சத்யராஜ் என் இரண்டு படங்களயும் நடித்த முக்கிய கதாபாத்திரங்களையும் இதில் நடிக்க வைத்து லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸ்  பாணியில் இதை  இயக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்கு சிவகார்த்திகேயனும் கிரீன் சிக்னல் காட்டி விட்டாராம்..

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments