தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். கடந்த 2015ல் புலி என்கிற படத்தில் நடித்த சமயத்தில், அந்த படத்திற்காக பெற்ற சம்பளத்தில் 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வருமானத்தை மறைத்ததாக கூறி அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது வருமானவரித்துறை. ஆனால் இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
அந்த மனுவில் காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் இந்த உத்தரவுக்கு இடைக்கால தலைவிதித்து உத்தரவிட்துள்ளார்.
மேலும் இந்த மனுவுக்கு வருமானவரித்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு செப்டம்பர் மாதம் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்