HomeNewsKollywoodபிரபாஸ் படத்திற்காக ஒரு வருடம் காத்திருக்க சொல்லும் கேஜிஎஃப் இயக்குனர்

பிரபாஸ் படத்திற்காக ஒரு வருடம் காத்திருக்க சொல்லும் கேஜிஎஃப் இயக்குனர்

பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். அந்த அதீத எதிர்பார்ப்பு தான் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான ராதே ஷியாம் படத்தின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

கமர்சியல் நாயகனாக பிரபாஸை பார்த்து பழகிவிட்ட ரசிகர்களால் அவரை ஒரு சராசரி காதல் நாயகனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை ராதே ஷியாம் படத்தின் ரிசல்ட் சொன்னது.

இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் சலார் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். தற்போது அவரது ரசிகர்களின் கவனம் எல்லாம் இந்த சலார் படத்தின் மீதுதான் திரும்பி உள்ளது. கேஜி எஃப் மற்றும் கேஜி எஃப் 2 என இரண்டு படங்களையும் சூப்பர் ஹிட் ஆக்கிய இயக்குனர் பிரசாத் நீல் இந்தப்படத்தை இயக்கி வருவது தான் இதற்கு காரணம். எப்படியும் நிச்சயம் இந்த படத்தையும் வெற்றிப்படமாக அவர் கொடுத்து விடுவார் என பிரபாஸ் ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் தரும் அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அதாவது சலார் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ள தயாரிப்பு நிறுவனம், வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தான் இந்த படம் வெளியாக இருக்கிறது என ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இன்னும் ஒரு வருடம் இந்த படத்திற்காக காத்திருக்க வேண்டுமா என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் சலார் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

அது மட்டுமல்ல இந்த படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால் இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தி வேலைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதனால் தான் சலார் பட ரிலீஸ்க்கு இன்னும் ஒரு வருடம் தேவைப்படுகிறதாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments