இயக்குனர் பா.ரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தனியாகவும் இன்னும் வேறு நிறுவனங்களுடன் இணைந்து நல்ல படைப்பாளிகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் விதமாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள், ரைட்டர் என கதையம்சம் கொண்ட பல படங்களை தயாரித்துள்ளார் பா.ரஞ்சித்.
இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு ஒரு படத்தை தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இந்த படத்தை அவருடன் லெமன் லீப் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.

இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் இருக்கின்றனர் இயக்குனர் பா ரஞ்சித்திரன் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

96 புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நயன்தாரா நடித்த O2 மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் ஆந்தாலாஜி படமாக வெளியாக தம்மம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஏற்கனவே தான் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து கதையை உருவாக்கி இருந்தார் பா.ரஞ்சித். தற்போது கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.