HomeNewsKollywoodகாட்டேரி படம் ஆரம்பித்து முடிவதற்குள் நடந்து முடிந்த கல்யாணமும் விவாகரத்தும் ; சுவாரசிய தகவல்

காட்டேரி படம் ஆரம்பித்து முடிவதற்குள் நடந்து முடிந்த கல்யாணமும் விவாகரத்தும் ; சுவாரசிய தகவல்

யாமிருக்க பயமே என்கிற ஹாரர் காமெடி படத்தை இயக்கியவர் டீகே. அவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் காட்டேரி. இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் ஆத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் சோனம் பஜ்வா பொன்னம்பலம் ரவி வரியா சேர்த்தேன் கோபி ஜான் விஜய் உள்ளிட்ட பலன் நடித்துள்ளனர்

இந்தப் படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது பற்றி பேசும்போது இயக்குனர் டீகேவும் ஹீரோ வைபவும் கதாநாயகி வரலட்சுமியும் கூட தங்களது பாணியில் கிண்டலாக இதைக் குறிப்பிட்டு பேசினார்கள்

வரலட்சுமி பேசும்போது, நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது நடித்த படம் காட்டேரி என்று குறிப்பிட்டார். நாயகன் வைபவ் பேசும்போது ஞானவேல்ராஜா சார் பெரிய படம் பண்ணுகிறேன் நடியுங்கள் என்று சொன்னார் ஆனால் இத்தனை வருடம் காலம் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

படத்தின் இயக்குனர் டீகே பேசும்போது இந்த படத்தின் துவக்க விழா சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இடம் பெற்று இருந்த இரண்டு பிரபலங்கள் திருமணம் செய்து அதன் பிறகு விவாகரத்தும் செய்து விட்டனர் என்று கூறினார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது, இவர்கள் சொல்வது போல பல தடைகளை தாண்டி நீண்ட காலம் கழித்துதான் இந்த காட்டேரி வெளியாகிறது. தற்போது எனக்கு நல்ல நேரம் பிறந்து இருப்பதால் காட்டேரிக்கும் நல்ல நேரம் வந்திருக்கிறது என்று கூறினார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments