சிபிராஜ் நடிப்பில் ரங்கா, மாயோன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாகிய நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள வட்டம் என்கிற படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை மதுபானக்கடை படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக இந்த படத்தை வெளியிடுகிறது
‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்த தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்றுகிறது.
ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக் தான் . இந்த படத்தின் திரைக்கதை என்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்