HomeNewsKollywoodசல்மான்கானுக்கு விடை கொடுத்தனுப்பிய மோகன் ராஜா

சல்மான்கானுக்கு விடை கொடுத்தனுப்பிய மோகன் ராஜா

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மோகன் ராஜா, தான் அறிமுகமான தெலுங்கு திரையுலகில் மீண்டும் நுழைந்து மெகாஸ்டார் சிரஞ்சீவி வைத்து காட்பாதர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

மோகன்லால் தவிர அவரது பாடிகார்டு கதாபாத்திரத்தில் அந்தப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவியின் நட்புக்காக பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒப்புக்கொண்டு கடந்த சில நாட்களாக நடித்து வந்தார்.

படத்தில் இவரது கதாபாத்திரம் சற்று நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோல் என்றாலும் படத்தில் இவர் வரும் காட்சிகள் மொத்தமே 15 நிமிடங்களுக்குள் தான் இருக்கும்.. என்றாலும் படம் முழுவதும் வருவது போன்று இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது தான் ஹைலைட்டே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் சல்மான் கான் காட்பாதர் படக்குழுவிடம் இருந்து விடைபெற்று மும்பை கிளம்பினார்.

இந்த படத்திற்காக இவருக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுப்பதற்கு தயாரிப்பாளர் முன்வந்த போதும் அதை சல்மான்கான்  அன்புடன் மறுத்து விட்டார் என்றும் சிரஞ்சீவியின் நட்புக்காகவே தான் இதில் நடித்ததாகவும் கூறினார் என்று கூட சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments