V4UMEDIA
HomeNewsKollywoodமுதல் நாள் படப்பிடிப்புக்கே கட் அடித்த மாமன்னன் உதயநிதி

முதல் நாள் படப்பிடிப்புக்கே கட் அடித்த மாமன்னன் உதயநிதி

கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது வரை தான் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மாமன்னன் என டைட்டில் வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் என்பதும் இன்று நடைபெற்ற துவக்கவிழா பூஜையில் உறுதியானது. அதுமட்டுமல்ல வடிவேலுவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்..

இது ஒரு பக்கம் இருக்க பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷ்யாம் படம் வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

இன்று சேலத்தில் மாமன்னன் படப்பிடிப்பில் காலையில் கலந்துகொண்ட உதயநிதி இயக்குனரிடம் பெர்மிஷன் கேட்டு மாலையில் சென்னையில் நடைபெற்ற ராதே ஷ்யாம் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் உதயநிதி பேசும்போது, “இன்றுதான் மாமன்னன் படப்பிடிப்பும் துவங்கியது. இந்த ராதே ஷ்யாம் படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மட்டும் அரை நாள் லீவு கொடுங்கள் என இயக்குனரிடம் கேட்டு, முதல் நாளன்றே கட் அடித்து விட்டு வந்து விட்டேன்.. இதோ உடனே மீண்டும் சேலத்திற்கு கிளம்ப வேண்டும்” என்று கூறி விடைபெற்றார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென 6 மணிக்கு மாற்றி முன்கூட்டியே துவக்கப்பட்டதன் காரணம், உதயநிதி ஸ்டாலின் வந்து இதில் கலந்துகொண்டு உடனடியாக திரும்பி செல்வதற்காகத்தான் என்பது உதயநிதி பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

Most Popular

Recent Comments