கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மே 03 வரை நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செல்வழிக்காமல் மக்களுக்காக அயராது உழைத்து வருகின்றனர் காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நுர்ஸ்கள்.
பிரபல நடிகர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் யோகிபாபு ஏற்கனவே FEFSI தொழிலர்களுக்கு 1250 கிலோ அரிசியும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்துக்கு 1250 கிலோ அரிசியும், சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு 1000 கிலோ அரிசி வழங்கியுள்ளார். இந்நிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு N95 முக கவசமும், குளிர் பானங்களும் வழங்கி உள்ளார்.