
‘மலர்’ டீச்சராக அறிமுகமாகி, ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் தமிழில் கடைசியாக நடிச்சு வெளிவந்த படம் ‘NGK’. தற்போது இவர் தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்து வருகிறார். ராணாவின் ‘விராட்டா பர்வம்’ என்ற படத்தில் சாய் பல்லவி நடித்து கொண்டிருக்கிறார். இந்த படப்பிடிப்பின் ஒரு கட்டமாக படக்குழு வாரங்கலுக்கு சென்றுள்ளனர். கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை போல பஸ் ஸ்டாப்பிற்குள் நடிக்கும்படி அவருக்கு காட்சி இருந்தது.

அவர் ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒரு பெஞ்சில் கூட அமர்ந்துள்ளார், அனால் அங்கு சுற்றி இருக்கும் யாரும் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. காட்சிக்கு எதிரே உள்ள ஹோட்டலில் படக் குழுவினர் அமைத்த ரகசிய கேமராவில் எல்லாம் பதிவு செய்யப்பட்டதால் நடிகை படப்பிடிப்பு முடிந்தவனுடன் நடந்து சென்றுவிட்டார். யாரும் அவரை கவனிக்கவில்லை என்றாலும் அருகில் இருந்தவர் இவரை ரகசியமாக எடுத்த புகைப்படம் ஒன்று தபோது வைரலாகி வருகிறது.


























