வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இப்படத்தில் சிம்பு கதாநாயகனாகவும், கல்யாணி பிரியதர்ஷன் பெண் கதாநாயகியாகவும் நடிக்கவிருந்தார்.
அரசியல் த்ரில்லர் என்று அழைக்கப்படும் இந்த படம் சுவாரஸ்யமான கலவையின் முன்னணியில் இருப்பதால் அதன் மீது பெரும் எதிர்பார்ப்புகளைக் வைத்திருந்தனர் ரசிகர்கள். இருப்பினும், இப்போது படத்தின் தயாரிப்பாளர் மாநாடு படம் கைவிடப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கையில், சிம்பு எவ்வளவு நல்ல மனம் படைத்தவர் என்று அவர் கூறினார், ஆனால் சில சிக்கல்கள் காரணமாக படம் தொடர முடியவில்லை. இது அவரது இதயத்திற்கு நெருக்கமான ஒரு படம் என்று அவர் மேலும் கூறினார்.
சிம்பு கடைசியாக சுந்தர் சி இயக்கி லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்தார். தயாரிப்பாளரின் அறிக்கையில்:
வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!
-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்”
என்று அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவரது டுவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


























