HomeNewsBollywood‘சந்தோஷமே சந்ததியினரின் புன்னகையில் தான்’ - அமிதாப் பச்சன்!!

‘சந்தோஷமே சந்ததியினரின் புன்னகையில் தான்’ – அமிதாப் பச்சன்!!



Image

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ‘ப்ரோ கபடி லீக் போட்டியில்’ பாலிவுட்டின் நடிகரான அபிஷேக் பச்சன் ஜெய்ப்பூர்  ‘பிங்க் பாந்தர்ஸ்’ அணியை வாங்கியுள்ளார். இவர்களது கபடி போட்டி வரும் சனிக்கிழமை அன்று நடந்தது. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணியினரின் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் கலந்துகொண்டு போட்டியாளர்களை அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் உற்சாகப்படுத்தினர்.

Image

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா பச்சன் ஆகியோர் அபிஷேக் பச்சனின் ஜெய்ப்பூர் அணி ‘பிங்க் பாந்தர்ஸ்’ கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற உற்சாகப்படுத்தினர். தனது குடும்பத்தின் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் நடிகர் அமிதாப் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோரின் படங்களை திங்கள்கிழமை காலை ட்விட்டரில் வெளியிட்டார். நடிகர் முதலில் ஒரு ரசிகர் பகிர்ந்த புகைப்படங்களை மறு ட்வீட் செய்து, “சந்தோஷமே சந்ததியினரின் புன்னகை” என்று இதய ஈமோஜிகளுடன் எழுதினார்.

அபிஷேக் பச்சனின் பிங்க் பாந்தர்ஸ் அணியின் கபடி போட்டியில் இருந்து தோன்றும் படங்களில், ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் அணியை உற்சாகப்படுத்துவதைக் காணலாம். அவர்கள் அணி ஜெர்சிகளையும் அணிந்திருப்பதைக் காணலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments