குரூப் டேன்சராக தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையை தொடங்கினாலும், தனது அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பால் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குனராக வளர்ந்தார். இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபரிந்துள்ளார். பின் இயக்குனராக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சிக்ஸர் அடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட் ஆனது. தான் எவளோ சம்பாதித்தாலும் அதில் பெரும்பகுதியை நலத்திட்ட உதவிகளுக்கும், தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கும் கொடுப்பார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தமிழ் சினிமாவில் நிவாரண நிதி அதிகமாக கொடுத்த நடிகர் லாரன்ஸ். இது மட்டுமின்றி தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தனது சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்குமாறு கூறியுள்ளார்.
இவர் அதிதீவிர சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் ரிலீஸானது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் அவர் திரையுலகில் வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன. ரஜினியின் 45வருட சினிமா பயணத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாதம் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ” சூப்பர்ஸ்டார் ரஜினியின் 45 ஆண்டுகால சினிமா பயணத்தை வேற லெவலில் கொண்டாடி வருகிறது திரையுலகம். நான் மிகவும் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ரஜினி அவர்களை பார்க்கின்றேன். நாம் ஒவ்வொருவருக்கும் அவரது எளிமை மற்றும் கடின உழைப்பு கற்று கொடுப்பதால் அவர் தான் நம் அனைவருக்கும் குரு. அவருடைய உடல்நலம் நன்றாக இருக்க நான் ராகவேந்திரா சுவாமியை வேண்டுகிறேன் ! குருவே சரணம் ” என குறிப்பிட்டுள்ளார்.
Cinema is celebrating 45years of #Rajinism in Vera level,I feel so happy and proud to see this being his fan. He is a guru for everyone because of his hard work and simplicity. I pray Ragavendra swamy for his good health and wealth. Guruve saranam 🙏@rajinikanth pic.twitter.com/oAeTYuRbzT— Raghava Lawrence (@offl_Lawrence) August 11, 2020
