நடிகை சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் சென்னை நசரத்பேட்டை உள்ள தனியார் விடுதியில் தனது கணவர் ஹேம்நாத்துடன் தங்கி இருந்துள்ளார்.

விடுதிக்கு இரவு 2.30 மணியளவில் வந்த சித்ரா அதிகாலை 5 மணியளவில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக நசரத்பேட்டை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் சித்ரா – ஹேம்நாத் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இருவரும் பெற்றோர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் சித்ரா திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த டிவி நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் மற்றும் உறவினர்கள் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை போலீசார் கண்டுபிடிக்க தந்தை மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.