தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ தெலுங்கு திரை முன்னோட்டத்தை நாகார்ஜுனா, வெங்கடேஷ் வெளியிட்டனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கேப்டன் மில்லர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏசியன் மல்டிபிளக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலம் ஜனவரி 25 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு திரையரங்குகளுக்கு வந்த இப்படம் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது தெலுங்கு திரை முன்னோட்டம் வெளியாகியுள்ளது. கிங் நாகார்ஜுனா மற்றும் விக்டரி வெங்கடேஷ் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளத்தில் திரை முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

கேப்டன் மில்லரின் திரை முன்னோட்டம் தனுஷை முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. தனுஷ் ஒரு உள்ளூர் போரளியாக தோன்றுகிறார், அவரது கிராமத்தை சூறையாட முயற்சிக்கும் காலனித்துவவாதிகளை எதிர்கொள்கிறார். அவர் ஆங்கிலேயர்களால் கொள்ளைக்காரர் என்றும் உள்ளூர் மக்களால் துரோகி என்றும் முத்திரை குத்தப்படுகிறார். தனுஷின் செயல்கள் மற்றவர்களின் நடத்தையைப் பொறுத்து இருப்பது முன்னோட்டத்தின் மூலம் தெரிகிறது.

தனுஷ் வித்தியாசமான அவதாரங்களில் தோன்றி அசத்துகிறார்.பிரியங்கா மோகனும் முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.அதே சமயம் சந்தீப் கிஷன் மற்றும் டாக்டர் ஷிவராஜ்குமார் ஆகியோரும் முன்னோட்டத்தில் காணப்படுகின்றனர்.

அருண் மாதேஸ்வரன் கதையை சுவாரஸ்யமாக முன்வைத்து, தனுஷை இதுவரை இல்லாத தீவிரமான மற்றும் அதிரடியான அவதாரத்தில் காட்டியிருக்கிறார். சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது, அதே நேரத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அட்டகாசமான பின்னணி இசையின் மூலம் காட்சிகளை நிறைவு செய்துள்ளார்.அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். படத்தின் தயாரிப்பு பணிகள் மிகவும் தரமாகவும் நேர்த்தியாகவும் உள்ளன. இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரித்துள்ளனர்.
T.ராமலிங்கம் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பாகுபலி,ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற படங்களில் பணியாற்றிய மதன் கார்க்கி இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு வசனகர்த்தாவாகவும், நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.