கீர்த்தி சுரேஷ்-ராதிகா ஆப்தே மோதும் YRF-ன் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ள கடுமையான பழிவாங்கும் தொடராக ‘அக்கா’ உருவாகி உள்ளது.
முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட், அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் அதன் அடுத்த படைப்பிற்கு பச்சைக் கொடி காட்டி இந்தியாவில் இன்று மிகவும் பாராட்டப்படும் இரண்டு பெண் நடிகர்களை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும் கடுமையான பழிவாங்கும் தொடராக ‘அக்கா’வை உருவாக்கி உள்ளது! இது கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே நடிப்பில் அதி தீவிரமான தொடராக இருக்கும்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இன்று இந்தியாவில் மிகவும் திறமையான பெண் நடிகர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் நம்பமுடியாத அளவுக்கு இயல்பான கலைஞர்கள், திரையில் அட்டகாசமான திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் படத்திற்கு படம் அடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்குக்கிறார்கள்! எனவே, கீர்த்தியும் ராதிகாவும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவது ‘அக்கா’வை தற்போது நாட்டில் உருவாக்கப்படும் மிகவும் சுவாரஸ்யமான இணைய தொடர்களில் ஒன்றாக மாற்றி இருப்பதாக வர்த்தக வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.
“இந்தத் தொடரை அறிமுக எழுத்தாளரும் இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார், இவர் சமீபத்தில் ஆதித்யா சோப்ராவால் கண்டறியப்பட்ட படைப்பாளி ஆவார். இவரின் ‘அக்கா’ தொடரின் தொலைநோக்கு பார்வை ஆதித்யாவின் கவனத்தை ஈர்த்தது, மேலும் YRF என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க தொடர்களில் ஒன்றாக ‘அக்கா’வை மாற்ற ஆதியின் சுருக்கமான விளக்கம் பச்சைக்கொடி காட்ட வழி செய்தது. இந்தத் தொடரைச் சுற்றி சூழ்ச்சியைக் கட்டமைக்க இந்தத் தொடரின் ஒவ்வொரு விவரமும் YRF ஆல் வேண்டுமென்றே மறைத்து வைக்கப்படும்,” என்று மேலும் அந்த வர்த்தக வட்டாரத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார்.

YRF என்டர்டெயின்மென்ட்டின் முதல் தொடரான ‘தி ரயில்வே மென்’ தற்போது நெட்ஃபிளிக்ஸில் உலகளவில் டாப் 10 தொடர்களில் டிரெண்டிங்கில் உள்ளதன் மூலம் உலகத் தரத்திலான வெற்றிக் கதையாக, மாறி உள்ளது! ஆர்.மாதவன், கே.கே.மேனன், திவ்யேந்து ஷர்மா மற்றும் பாபில் கான் ஆகியோர் நடித்த 1984 போபால் விஷவாயு சோகத்தின், வெளிகாட்டப்படாத ஹீரோக்களுக்கு இது அஞ்சலி.
YRF என்டர்டெயின்மென்ட்டின் இரண்டாவது தொடர் ‘மண்டேலா மர்டர்ஸ்’ ஆகும், இது பல சீசன் தொடராகும், இது ஒரு மோசமான க்ரைம் த்ரில்லர். சண்டிகர் கரே ஆஷிகி திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா (குல்லாக் புகழ்) உடன் இணைந்து ஸ்ட்ரீமிங் தளத்தில் தனது முதல் அறிமுக தொடரை வழிநடத்துகிறார். சுர்வீன் சாவ்லா (டீகபுல்டு) மற்றும் ஜமீல் கான் (குல்லாக்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் தற்போது தயாரிப்பில் உள்ளது.
“ஒய்ஆர்எஃப் என்டர்டெயின்மென்ட் இந்தியாவின் நிலப்பரப்பை உள்ளடக்கிய புதிய தடைகளை உடைக்கக்கூடிய கதைக்கருக்களை கொண்டுள்ள தொடர்களை வடிவமைப்பதில் பங்களிக்கக்கூடிய ஆர்வமாக உள்ளது. ஒவ்வொரு படைப்பிலும், இதுவரை யாரும் கண்டிராத அளவில் உலகளாவிய பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத இந்தியக் கதைகளைச் சொல்லும் நோக்கத்தை உறுதிப் படுத்துகிறது. ‘தி ரயில்வே மென்’-ன் மிகப்பெரிய வெற்றி ரசிகர்களின் ஒருமனதான நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகிறது” என வர்த்தக வட்டாரத்தைச் சேர்ந்தவர் மேலும் கூறுகிறார்.