V4UMEDIA
HomeNewsKollywoodதங்கர் பச்சான் படத்தை மிகவும் எதிர்பார்க்கும் அதிதி பாலன்

தங்கர் பச்சான் படத்தை மிகவும் எதிர்பார்க்கும் அதிதி பாலன்

தமிழில் 2017-ல் வெளியான அருவி என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். முதல் படத்திலேயே தனது துணிச்சல் மிகுந்த கதாபாத்திரத்தாலும் நடிப்பாலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற அதிதி பாலன் இந்த ஐந்து வருடங்களில் மிக குறைவான படங்களிலேயே நடித்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக அவர் நடித்திருந்த படவேட்டு திரைப்படம் வெளியானது. இந்தநிலையில் அவர் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதிதி பாலன் கூறும்போது, “இந்த படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பல கஷ்டங்களை அனுபவித்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராமல் ஒரு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும்போது அந்த பெண்ணின் வாழ்க்கை எவ்வாறு திசை மாறுகிறது, அதை அந்த பெண் எப்படி கையாள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண்ணுக்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவை சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. தங்கர்பச்சான் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்பினேன். அவருடன் இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம்.

அதுமட்டுமல்ல உடன் நடித்த பாரதிராஜா சார், நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை எனக்கு அழகாக சொல்லிக் கொடுத்தார். முதல் படமான அருவி சீரியஸ் ஆன படமாக இருந்ததால் அது போன்ற படங்களில் தான் நடிப்பேன் என்று கருதி விட்டார்கள். ஆனால் நான் அனைத்து கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments