V4UMEDIA
HomeNewsKollywoodசபரிமலையில் பக்தர்களை வரவேற்று உரையாடிய யோகி பாபு

சபரிமலையில் பக்தர்களை வரவேற்று உரையாடிய யோகி பாபு

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தற்போது தமிழ், மலையாளத்தில் உருவாகி வரும் சன்னிதானம் பி ஓ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை ராஜீவ் வைத்யா என்பவர் இயக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு சபரிமலையில் நடைபெற்று வருகிறது. காரணம் இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி இந்த படத்தின் கதை சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சபரிமலையில் சித்திரை விஷுவை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் அங்கே யோகிபாபுவின் படப்பிடிப்பு நடப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

யோகி பாபு அங்கே வந்த பக்தர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடி ஐயப்ப தரிசனம் செல்வதற்காக அவர்களை வழியனுப்பி வைத்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Most Popular

Recent Comments