சில நேரங்களில் வளர்ந்து வரும் நடிகர்களின் நடிப்பில் உருவாக்கி வரும் படங்கள் சில எதிர்பாராதவிதமாக ரசிகர்களின் கவனத்துத்தி கவர்ந்து விடுவதுண்டு. அப்படி ஒரு படம்தான் இயக்குனர் துவாரகா ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பரோல்.

இந்த படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இப்போது வரை ஒரு யூட்யூப்பில் மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தின் ட்ரெய்லரில் நடிகர் விஜய்சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இந்த படம் பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறும்போது, “பிடிக்காத அண்ணன் ஜெயிலில் இருக்கிறான். தாய் இறந்த காரணத்தால் அவனை பரோலில் எடுக்கும் சூழ்நிலை தம்பிக்கு ஏற்படுகிறது. ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் அண்ணன் தம்பிக்கு இடையே என்ன விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

ஒரு குடும்பத்திற்கு பின்னாலிருக்கும் சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு விஷயத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. சொல்லப்போனால் இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோசனல் கதை. அதேசமயம் வலுவான ஆக்ஷனும் திரைக்கதையும் உள்ளது..

இந்த படத்தை முடித்ததும் நடிகர் விஜய்சேதுபதியிடம் திரையிட்டு காட்டினேன். பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என பாராட்டினார். மேலும் எனது கோரிக்கையை ஏற்று இந்த படத்தின் ட்ரெய்லருக்கு மட்டுமல்ல படத்தின் கதையை நகர்த்திச் செல்லும் விதமாகவும் குரல் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி: என்று கூறினார் துவாரக் ராஜா