பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தாய் தந்தையை போன்றே திரையுலகில் நுழைந்து தாயின் வழியில் நடிகையாக பிரகாசித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அவர் நடித்து வரும் படங்கள் அனைத்துமே பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்று வருவதுடன் ராசியான நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளன.

கடந்த வருட இறுதியில் தமிழில் வெளியான மாநாடு, பிரித்விராஜ் ஜோடியாக நடித்த புரோ டாடி, மோகன்லால் மகன் பிரணவ் ஜோடியாக நடித்த ஹாய்ருதயம் என அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் சேஷம் மைக்-இல் பாத்திமா என்கிற புதிய படத்தில் நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்த படத்தை இயக்குனர் மனு சி.குமார் என்பவர் இயக்குகிறார். ஏற்கனவே கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் நடித்து ஹிட்டான ஹிருதயம் படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வகாப் என்பவர்தான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்..

வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.