மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் மூன்றாவது படமாக இது உருவாகி வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.

இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. செப்டம்பர் 2ல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து புதிய அப்டேட் தகவல் ஒன்றை கூறியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.

அதாவது இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது என்றும் அதில் முதல் பாகம் தான் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது என்றும் கூறியுள்ளார் கவுதம் மேனன்.

முதல் பாகத்தில் சாதாரண ஒரு இளைஞராக இருந்த சிம்பு ஒரு கேங்ஸ்டர் ஆக மாறுகிறாராம். இரண்டாம் பாகம் அந்த கேங்ஸ்டர் வாழ்க்கை நடைபெறும் விஷயங்களை பற்றி உருவாக இருக்கிறதாம்.

இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார் கவுதம் மேனன்.