Home News Kollywood சரத்குமாரின் 150வது படத்தில் அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா ?

சரத்குமாரின் 150வது படத்தில் அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா ?

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சரத்குமார் ‘தி ஸ்மைல் மேன்’ என்கிற படம் மூலம் தனது நடிப்பு பயணத்தில் 150வது படம் என்கிற மிகப்பெரிய மைல்கல்லை தொட்டுள்ளார். வெகுசில ஹீரோக்களே இந்த சாதனையை செய்துள்ள நிலையில் இந்த படம் நிச்சயமாக சரத்குமாரின் திரையுலக பயணத்தில் முக்கியமான படம்தான்.

இந்த படத்தில் ஓய்வு பெற்ற  ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் சரத்குமார். அம்னீசியா நோயால் தாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது ஞாபகங்களை இழந்துவரும் நிலையில் ஒரு முக்கியமான வழக்கு ஒன்றை துப்பறிந்து கண்டுபிடிக்கும் வேடத்தில் தான் நடிக்கிறார் சரத்குமார்.

இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார்,  ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். 8 தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்தப்படத்தை இயக்குகின்றனர்