V4UMEDIA
HomeNewsKollywoodதமிழ் சமுகத்திற்கே தலைகுனிவு - நடிகர் கார்த்தி வருத்தம் !

தமிழ் சமுகத்திற்கே தலைகுனிவு – நடிகர் கார்த்தி வருத்தம் !

கொரோனா வைரஸால் லட்சக்கணக்கோனோர் உலகம் முழுவதும் மடிந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நோய் தொற்று பரவாமல் இருக்க, நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு மே 03 வரை பிற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொது மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். முக்கியமாக மருத்துவர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் எந்நேரமும் மக்களுக்காக உழைத்து கொண்டு இருக்கின்றனர்.

தன் நலனையும் பொருட்படுத்தாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து கொரோனாவாலே இறந்தவர் தான் சென்னையை சேர்த்த டாக்டர் சைமன். இவரது உடலை தங்கள் பகுதி சுடுகாட்டில் அடக்கம் செய்வதால் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் சென்னை வேலங்காடு பகுதி மக்கள் தடுத்தனர். தமிழகத்தில் பெரும் அழுத்தத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து தனது டுவிட்டரில் நடிகர் கார்த்தி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில் “டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்”

டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்! pic.twitter.com/BovGYTTzho— Actor Karthi (@Karthi_Offl) April 20, 2020

Most Popular

Recent Comments