கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. உலகமே எதிர்பார்த்த ஒலிம்பிக் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல், மே மாதத்தில் களைகட்டக்கூடிய ஐபிஎல் போட்டிகளுக்கு மும்பை முதல் தமிழ்நாடு வரை கோடிக்கணக்கான மக்கள் ரசித்து பார்ப்பார்கள். கொரோனாவினால் ஐபிஎல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் CSK அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தல தோனி தலைமையில் கிரவுண்ட் நுழைந்தாலே அரங்கம் அதிரும். மே மாதம் முதல் வாரத்திற்குள் நிலைமை சீரடைந்து மே இறுதியிலோ ஜூன் மாதத்திலோ ஐபிஎல் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரரான மகேந்திர சிங் தோனி கடந்த உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின்பு எந்த போட்டியிலும் விளையாடாத சோகத்தில் இருந்த ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவதைப் பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் இருந்தார்கள். இப்போது அதுவும் நடைபெற முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
சென்னையில் நடைபெறும் போட்டிகளை தவறாமல் நேரில் சென்று பார்க்கும் பழக்கம் கொண்ட பிரபலங்களில் நடிகை வரலட்சுமியும் ஒருவர். ஐபிஎல்லின் ஒவ்வொரு சீசனிலும் சென்னையில் நடைபெறும் போட்டிக்கு தவறாமல் நண்பர்களுடன் சென்றுவிடும் வரலட்சுமி இந்த முறை ஐபிஎல் தொடரை பார்க்கமுடியாமல் போனதற்கு வருத்தப்பட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் ‘ஐபிஎல் போட்டிகளை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் சென்னை அணிக்கு ஆதரவளிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடையுடன் அவர் நண்பர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும்’ பதிவிட்டுள்ளார்.
I miss this the mostttttttttt….#iplmadness #throwback #lastyear #CSKlove💛 #dhoni💛 pic.twitter.com/uqLdRwcC88— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) May 13, 2020