V4UMEDIA
HomeNewsKollywoodஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் "இன்று நேற்று நாளை" திரைப்படம் !

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “இன்று நேற்று நாளை” திரைப்படம் !

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார். இவரது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டசுபட்டி, சரபம், எனக்குள் ஒருவன், இறைவி போன்ற பல வெற்றி படங்களைத் தயாரித்துள்ளார். 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்திற்கான தமிழ் அறிமுக தயாரிப்பாளருக்கான சைமா விருதினை பெற்றார். இவர் மாயவன் என்ற படத்தை 2017ம் ஆண்டு தயாரித்து இயக்கினார் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 



காலப் பயணத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ‘இன்று நேற்று நாளை’ . ஜூன் 26 2015 அன்று சி.வி.குமார் அவர்களின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது. அறிமுக இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷ்ணுவிஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வசூல் வாரி குவித்தது. 



‘இன்று நேற்று நாளை’ படம் வெளியாகி இன்றோடு ஐந்தாண்டு நிறைவடைகிறது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது சமூக வலைத்தளங்களில் ‘இன்று நேற்று நாளை ‘படத்தில் வரும் டைம் மெஷின் புகைப்படத்தை பதிவிட்டு, இன்று நேற்று நாளையின் ஐந்து வருடங்கள் எனவும் இந்த படத்தில் தனக்கு மறக்கமுடியாத நல்ல நினைவுகள் நிறைய உள்ளதாகவும் மேலும் இந்த டைம் மெஷின் உங்கள் கையில் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?? என டிவீட் செய்துள்ளார்.

WE ALL WISH WE HAD A TIME MACHINE NOW…
Happy celebrating the 5th year with you guys..
Thank you all😘😘#5YearOfIndruNetruNaalai@Ravikumar_Dir@icvkumar @hiphoptamizha#Karunakaran#MiaGeorge
……COMING UP SOON……
#IndruNetruNaalai2 pic.twitter.com/Q8wTPOk2Al— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) June 25, 2020

Most Popular

Recent Comments