V4UMEDIA
HomeNewsKollywoodபெயர், புகழ், வசதியோடு வாழ்வதற்கு காரணமே கே.பி சார் தான்- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்

பெயர், புகழ், வசதியோடு வாழ்வதற்கு காரணமே கே.பி சார் தான்- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்

தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் சிகரம்’ என புகழப்படும் கே. பாலச்சந்தர் அவர்கள், ஒரு புகழ் பெற்ற இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கினார். மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

Image

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Image

இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் பாலச்சந்தர் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்

“கே.பாலசந்தர் சார் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் நடிகனாக இருந்திருப்பேன். கன்னட சினிமாவில் ஒரு வில்லனாகவோ, சின்னச் கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பேன். ஆனால் நான் இன்று பெயரும், புகழும், வசதியாக வாழ்வதற்கு காரணமே அவர் தான். எனக்கு பெயர் வைத்து, எனது மைன்ஸ்களை நீக்கி, எனது பிளஸ்களை எனக்குக் காட்டி கொடுத்து, என்னை ஒரு முழு நடிகனாகி நான்கு படங்களில் நல்ல கதாப்பாத்திரங்கள் கொடுத்து ஒரு நட்சத்திரமாகவே என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்” என தெரிந்துத்துள்ளார்.

Most Popular

Recent Comments