வசந்த பாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ஸ்ரீதரன் மரியதாஸன் தயரித்துள்ள திரைப்படம் ‘ஜெயில்’. ராதிகா சரத் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், பிரகாஷ் ராஜ், சூரி, ஆனந்த் பாபு, பாபி சிம்ஹா, அபர்நதி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜெயில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான ‘சோனி செளத் மியூசிக்’ வாங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை ஒரு ட்வீட் செய்தார். அதில் ” முதல் பாடலான ‘காத்தோடு காத்தானேன்’ பாடலுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி ! “ஜெயில்” படக்குழுவினர் இரண்டாவது சிங்கிள் வெளியிட முடிவு செய்துள்ளோம். ” பத்து காசு ” நண்பர்களுக்காக பாடல் என இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 18 ரிலீஸ் செய்யப்படும் ” என ட்வீட் செய்துள்ளார். இப்பாடலை பிரபல பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ளார்.
முதல் பாடலான ‘காத்தோடு காத்தானேன்’ பாடலை பிரபல பாடலாசியர் கபிலன் வரிகளில், தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இரண்டாவது பாடலுக்கு இப்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கொண்டிருகின்றனர்.