சிம்பு மற்றும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக இணையும் படம் “மாநாடு” . பல சர்ச்சைகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு மாநாடு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார், முக்கிய கதாபாத்திரங்களில், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், சனம் ஷெட்டி, அஞ்சனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி மகேந்திரன், டேனியல் அன்னே போப், பிரேம்ஜீ, சுப்பு பஞ்சு, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர்.
மாநாடு படம் பாதியில் ட்ராப் ஆகிவிட்டது, சிம்பு சொன்ன நேரத்தில் ஷூட்டிங் வர மாட்டார் போன்ற தேவையற்ற பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்ப்போது மீண்டும் மாநாடு திரைப்படம் ட்ராப் ஆனதாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
If such a news comes hereafter i wl sue the concern media.I always respect media team and being close to thm. I never gave any statement like this.Without cross checking wth a producer hw can a reputed publication print a news? #Maanaadu never going to drop.Plz stop ur table work pic.twitter.com/Bmyd5Muom9— sureshkamatchi (@sureshkamatchi) August 6, 2020
இந்த செய்தியை பார்த்ததும் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற படத்தின் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
“இனிமேல் இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்பினால் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தை நான் சும்மா விடமாட்டேன் என எச்சரித்துள்ளார். இது மட்டுமின்றி, ஊடகத்துறையின் மீது எப்போதும் பெரும் மரியாதையை வைத்திருப்பவன் நான். ஆனால், அடிக்கடி இப்படி படக்குழுவினரை விசாரிக்கலாமே அவர்கள் இஷ்டத்திற்கு எப்படி பொய்யான செய்தி வெளியிடலாம் ?? மாநாடு படம் எப்போதும் டிராப் ஆகாது. எனவே, இது போன்ற வீண் வதந்திகளை பரப்பும் வேலையை நிறுத்தி விடுங்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.