த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி பதிப்பை இயக்கிய இயக்குனர் நிஷிகாந்த் காமத் உயிரிழந்துள்ள்ளார். இன்று காலையிலே நிஷிகாந்த் உயிரிழந்துவிட்டதாக பரவிய செய்தியை ஹிந்தி நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் மறுத்தார். அதையடுத்து, தற்போது ஹிந்தி நடிகர் ரித்தீஷ் தேஷ்முக், நிஷிகாந்த் இறந்துவிட்டதாகத் அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘டோம்பிவலி பாஸ்ட்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனார் நிஷிகாந்த். இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் மாதவனை வைத்து ‘எவனோ ஒருவன்’ படத்தினை இயக்கினார். பெயரில் இயக்கினார்.
நிஷிகாந்த் காமத் கடந்த காலங்களில் லிவர் சிரோசிஸ்ஸால் பாதிக்கப்பட்டிருந்ததால், மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றுப் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிஷிகாந்த் காமத் நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நிஷிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.