தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடந்த 17,18,19-ஆகிய தேதிகளில் அதி தீவிர கனமழைப் பொழிவு ஏற்பட்டு கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் தீவிர பாதிப்புக்கு உள்ளாகின. அம்மாவட்ட மக்களும் வெள்ள நீரினால் கடும் அவதிக்குள்ளாயினர்.
இராணுவம்,தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடி மீட்பு பணிகளைத் துவங்கினர். பாதிப்புக்குள்ளாகிய மக்கள் மெல்ல மெல்ல மீட்கப்பட்டு இயல்பு வாழ்கைக்கு திரும்பி கொண்டிருக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்ட்டு வருகிறது.
அவ்வாறே ‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் அவர்களின் ரஜினிகாந்த் அறக்கட்டளை(Rajinikanth Foundation) சார்பிலும் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உணவு பொட்டலங்கள், குடிநீர் , பால் பவுடர் , பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருநெல்வேலி,தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் நாளை காலை பத்து மணி அளவில் விநியோகம் செய்யயப்பட உள்ளது.