கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வந்த தனுஷ், அதை முடித்துவிட்டு அடுத்ததாக தனது ஐம்பதாவது படத்தில் நடிக்க துவங்கி விட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தனுஷின் ஐம்பதாவது படமாக தயாராகிறது.

பவர் பாண்டி படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனுஷ் தானே நடித்து படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகி யார், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதே சமயம் நடிகர் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துருவங்கள் பதினாறு புகழ் அஸ்வின் குமார் ஆகியோர் இந்த படத்தில் தாங்கள் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதில் நடிகர் சந்தீப் கிஷன் தற்போது தான் தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தனுஷின் நட்பையும் அபிமானத்தையும் பெற்றுவிட்டதாலோ என்னவோ இந்த படத்திலும் ஒரு பொருத்தமான கதாபாத்திரத்தில் மீண்டும் சந்தீப் கிஷனை இணைத்துக் கொண்டார் என்றே தெரிகிறது.