V4UMEDIA
HomeNewsKollywoodபார்த்திபன் படத்திலிருந்து ஒதுங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் 

பார்த்திபன் படத்திலிருந்து ஒதுங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்பெல்லாம் அதிக அளவிலான ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருந்த காலகட்டத்தில் தமிழில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே இசையமைத்து வந்தார். ஆனால் பாலிவுட்டில் தனக்கு எதிராக பாலிடிக்ஸ் நடக்கிறது என சில வருடங்களுக்கு முன்பு கூறிய அவர் அதைத்தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி அதிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதில் பெரிய பட்ஜெட் படங்கள் என்று மட்டும் இல்லாமல், பார்த்திபன் இயக்கத்தில் உருவாக இரவின் நிழல் உள்ளிட்ட பரிசோதனை முயற்சியிலான படத்திற்கும் கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியம் தான். 

அந்த வகையில் இரவின் நிழல் படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையை முன்னிலைப்படுத்தியே பப்ளிசிட்டி செய்தார் பார்த்திபன். இதை தொடர்ந்து மீண்டும் தனது அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர் என கூறியும் வந்தார்.

இந்த நிலையில் தற்போது தனக்கு சினிமாவிலும் பர்சனலாகவும் வேலைப்பளு அதிகமாக இருக்கும் காரணத்தால் பார்த்திபனின் புதிய படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை . எனக்கூறி இந்த புதிய படத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதுகுறித்து தனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இமெயிலில் அனுப்பிய செய்தியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பார்த்திபன். “பழகுதல் காதலால்.. விலகுதலும் காதலால்.. ஆதலால்…. ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை! வரும் படத்திலும்-இருவரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments