தளபதி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நுழைந்து 30 வருடங்களை கடந்து விட்டார் இந்த நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது 49 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். விஜய் ரசிகர்கள் இப்போதே சோசியல் மீடியாவில் அவரது பிறந்த நாளை வரவேற்க தயாராகி விதவிதமாக வாழ்த்துக்களுடன் கூடிய போஸ்டர்களை பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் மீடியாக்களும் விஜய் குறித்த நிகழ்ச்சிகள், பிரச்சாரங்கள், போட்டிகள் ஆகியவற்றை துவங்கியுள்ளனர். அந்த வகையில் எஸ் எஸ் மியூசிக் சேனல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அதுவும் அவர் தற்போது நடித்து வரும் லியோ படம் தொடர்பாக ஒரு மிகப்பெரிய போட்டியை அறிவித்துள்ளது.

ஐகான் ஆப் மில்லியன்ஸ் ; தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநாடு.. அத்தனையும் ஒரு மனிதனுக்காக என்கிற ஒரு தலைப்பை வைத்து தற்போது தயாராகி வரும் விஜய்யின் லியோ படத்திற்கு அவரது ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்பதை 60 வினாடிகளுக்கு உட்பட்ட வீடியோவாக எடுத்து அதனை எஸ்எஸ் மியூசிக் சம்பந்தப்பட்ட சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதில் தேர்வாகும் வீடியோக்களை தளபதி விஜய்யே பார்வையிட இருக்கிறாராம். அதன்பின் சொல்ல வேண்டுமா, விஜய்யுடன் சந்திப்பு.. லியோ படத்திற்கு பிரிமியர் காட்சி உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கிடைக்கலாம் என்றும தெரிகிறது.

அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும் இதை வைத்து விஜய் பிறந்தநாளை தெறிக்க விடவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.