V4UMEDIA
HomeNewsKollywoodகதையை சொல்லிவிடவா ? வெங்கட்பிரபுவை படபடக்க வைத்த சரத்குமார்

கதையை சொல்லிவிடவா ? வெங்கட்பிரபுவை படபடக்க வைத்த சரத்குமார்

இயக்குனர் வெங்கட்பிரபு முதன்முறையாக தெலுங்கில் அடி எடுத்து வைத்து இளம் நடிகர் நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் கஸ்டடி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது.

கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க, முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். வாரிசு படத்தை தொடர்ந்து சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்துள்ள படம் இது.

இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சரத்குமார் மேடை ஏறி பேசும்போது இந்த படத்தில் முக்கிய காட்சிகள் குறித்த விபரங்களை கூறுவது போல பேச ஆரம்பித்தார். அப்போது அங்கே ஓரமாக நின்றிருந்த வெங்கட்பிரபு கதையை பற்றி தயவுசெய்து எதுவும் சொல்லிவிட வேண்டாம் என்பது போல கேட்டுக்கொண்டார்.

அதையடுத்து சரத்குமார் பேசும்போது, கதையை பற்றி சொல்லாமல் அதேசமயம் இந்த காட்சியை சொல்லிவிடவா, அந்த நிகழ்ச்சியை சொல்லி விடவா என்று ஒவ்வொன்றாக கேட்டு கேட்டு வெங்கட்பிரபுவை படபடக்க வைத்தார்.

அதே சமயம் அவரது பேச்சில் கதை பற்றி எதுவும் லீக் செய்யவில்லை. அடுத்து பேசிய வெங்கட் பிரபு இதற்காக சரத்குமாருக்கு நன்றி தெரிவித்தார்.

Most Popular

Recent Comments