V4UMEDIA
HomeNewsKollywoodலியோ படத்தின் மூலம் தமிழுக்கு வரும் மலையாள நடிகை

லியோ படத்தின் மூலம் தமிழுக்கு வரும் மலையாள நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.. மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரியும். பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாசலம் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மலையாள திரை உலகை சேர்ந்த சாந்தி மாயாதேவி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் இந்த சாந்தி மாயாதேவி.

இதைத்தொடர்ந்து மீண்டும் அதே மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகி வரும் ராம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் லியோ படம் மூலமாக அவர் தமிழ் திரையுலையில் அடி எடுத்து வைக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி உள்ளார் சாந்தி மாயாதேவி.

இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றார்.

அதேபோல விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகை அபர்ணா வினோத் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றார்.

அவர்களைப் போல இந்த சாந்தி மாயா தேவியும் தமிழ் ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments