V4UMEDIA
HomeNewsKollywoodநட்சத்திர குடும்பமாக பொன்னியின் செல்வன் படம் பார்த்து ரசித்த ஐஸ்வர்யா ராய்

நட்சத்திர குடும்பமாக பொன்னியின் செல்வன் படம் பார்த்து ரசித்த ஐஸ்வர்யா ராய்

உலக அழகி பட்டம் பெற்றபின் ஐஸ்வர்யா ராய்க்கு திரையுலகில் ஒரு நடிகையாக வெற்றிப் பாதை போட்டு கொடுத்து அவரது இந்த உயரத்திற்கு காரணமாக அமைந்தவர் இயக்குனர் மணிரத்தினம் தான். அவரது இயக்கத்தில் இருவர் படத்தில் தொடங்கி குரு, ராவணன், தற்போது பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பயணித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

அதுமட்டுமல்ல முக்கியமான கனமான கதையும் கதாபாத்திரங்களும் இருந்தால் மட்டுமே ஐஸ்வர்யா ராயை அழைத்து நடிக்க வைத்து வருகிறார. மணிரத்னம். அந்தவகையில்  பொன்னியின் செல்வன் படத்தில் பிரதான கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை அழைத்து அவர் நடிக்க வைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான நியாயம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் நடித்த நட்சத்திரங்களான கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா உள்ளிட்டோர் நேற்று சில திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களோடு அமர்ந்து இந்த படத்தை பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆரத்யா ஆகியோர் படத்தில் பிரதான நட்சத்திரங்களான விக்ரம், திரிஷா மற்றும் ஜெயம் ரவி, விக்ரம்பிரபு ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் விக்ரம் பிரபு, ஜெயம் ரவி ஆகியோரின் மனைவியரும் கலந்துகொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Most Popular

Recent Comments