V4UMEDIA
HomeNewsKollywoodகொடி இயக்குனரின் டைரக்சனில் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் சூரி

கொடி இயக்குனரின் டைரக்சனில் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் சூரி

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதை நாயகனாகவும் தன்னை வெற்றிகரமாக உருமாற்றிக் கொண்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்கிற அளவிற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் சூரி கதாநாயகனாக நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் அடுத்ததாக இயக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை பின்னணியில் உருவாகும் இந்த படம் விடுதலை படத்திற்கு  அப்படியே முற்றிலும் நேர்மாறாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Most Popular

Recent Comments