V4UMEDIA
HomeNewsKollywoodஇறந்த பின்னும் கூட விழிப்புணர்வை ஏற்படுத்தும் மயில்சாமி

இறந்த பின்னும் கூட விழிப்புணர்வை ஏற்படுத்தும் மயில்சாமி

தமிழ் சினிமாவில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவர் காலமானார்.. இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக விளம்பரம் என்கிற குறும்படத்தில் மயில்சாமி நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த குறும்படம் 7 பாகங்கள் கொண்ட வெப் சீரிஸ் ஆக தயாரிக்க திட்டமிட்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. இதனை அறிமுக இயக்குனர் ராகுல் என்பவர் இயக்கியுள்ளார்.

ஆனால் மயில்சாமியின் திடீர் மறைவால் அவர் கதையின் நாயகனாக நடித்து வந்த இந்த வெப்சீரிசை தொடர்ந்து கொண்டு செல்ல இயலாத சூழல் உருவாகலனது. அதேசமயம் அவர் நடித்த அந்த ஒரு எபிசோட் வீணாகி விடக்கூடாது என்று அதை விளம்பரம் என்கிற குறும்படமாக மாற்றி ரசிகர்களின் பார்வைக்கு எந்த கட்டணமும் இன்றி யூட்யூப் வலைதளங்களில் வெளியிட இருக்கிறார்கள்.

விளம்பரங்களில் நடிக்கும் சினிமா நட்சத்திரங்கள் மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக பொறுப்புணர்வுடன் விளம்பர படங்களில் நடிக்க வேண்டும் என்பதை திரில்லர் பாணியில் இதில் கூறியுள்ளனர்.

Most Popular

Recent Comments