தமிழ் சினிமாவில் பரபரப்பான ஆக்சன் படங்களுக்கும், குறிப்பாக அதிரடி போலீஸ் படங்களுக்கும் ஸ்பெஷலிஸ்ட் யார் எனக் கேட்டால் சின்ன குழந்தை கூட இயக்குனர் ஹரி என கை காட்டும். அந்த அளவிற்கு பரபரப்பாக ஆக்சன் படங்களுக்கு என் உள்ள ஒரு தனி ரசிகர் பட்டாளமே இவரது படங்களுக்கு உண்டு.

இந்த நிலையில் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் குட் லக் ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளார் இயக்குனர் ஹரி.

இதில் சினிமாவிற்கு தேவையான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் விதமாக நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது.

இதன் திறப்பு விழாவில் ஹரியின் ஆஸ்தான நடிகரான சூர்யா மற்றும் கார்த்தி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இடத்தில் ஏற்கனவே இயக்குனர் ஹரியின் மாமனாரும் அவரது மனைவி பிரீத்தாவின் கணவருமான நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் பிரிவியூ திரையரங்கம் ஒன்று இருந்தது. அதைத்தான் தற்போது குட்லக் ஸ்டுடியோ ஆக மாற்றி உள்ளனர்.