V4UMEDIA
HomeNewsKollywood1957ல் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ராவண கோட்டம்

1957ல் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ராவண கோட்டம்

இயக்குனர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு கிட்டத்தட்ட 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நிலையான இடத்தை தக்க வைப்பதற்காக போராட்டம் நடத்தி வருகிறார். சில படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டாலும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் முழுக்க முழுக்க அவரே கதாநாயகனாகவும் கதையின் நாயகனாகவும் நடித்துள்ள படமாக உருவாகியுள்ளது ராவண கோட்டம்.

இந்த படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மதயானை கூட்டம் என்கிற படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் துபாயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழக அமைச்சர் துரைமுருகன், லைகா சுபாஸ்கரன், இயக்குனர் பாக்யராஜ். நடிகைகள் மீனா, ராதிகா, குஷ்பூ, ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேசும்போது, “இந்த படம் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. பெரும்பாலும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு பகுதிகளிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

நடிகர் சாந்தனு தனது உயிரைக் கொடுத்து நடித்துள்ளார். இந்த படம் அவரது திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments