ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆர்ஆர்ஆர் படம் வெளியாவதற்கு முன்பே அதாவது கொரோனா காலகட்டத்திலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி பின்னர் சிறிய இடைவெளி விட்டு தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்று வந்தது. இங்கே ராம்சரண் மற்றும் நாயகி கியாரா அத்வானி நடிப்பில் முக்கியமான பாடல் காட்சிகளை படமாக்கி வந்தார் ஷங்கர்.
ஒளிப்பதிவாளராக திரு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நியூசிலாந்தில் தங்களது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஷங்கர். இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னைக்கு திரும்பும் ஷங்கர் இங்கே மீண்டும் கமலின் இந்தியன்2 படப்பிடிப்பை துவங்கி நடத்த உள்ளார்.