வெங்கட்பிரபு தனது படங்களுக்கு டைட்டில் வைப்பதில் ரொம்பவே கவனத்துடன் செயல்படுவார். இதற்கு முன்பு வெளியான அவரது அனைத்து படங்களின் டைட்டில்களையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில், தான் தற்போது தெலுங்கில் முதன்முதலாக ஒரு படத்தை இயக்குவதற்காக அடி எடுத்து வைத்துள்ளதால் அந்தப் படத்திற்கும் இதுவரை டைட்டிலை அறிவிக்காமல் படத்தை இயக்கி வந்தார்.

படத்தில் நாயகனாக நாகசைதன்யா, கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரேம்ஜி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு வெங்கட் பிரபு என்ன டைட்டில் வைக்க போகிறார் என்கிற ஆர்வம் படம் துவங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களிடம் இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் இருப்பதாக நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்புடன் வெளியான போஸ்டர் ரசிகர்களிடம் இன்னும் ஆர்வத்தை தூண்டியது.

இந்தநிலையில் இந்த படத்திற்கு தற்போது கஸ்டடி என டைட்டில் வைத்துள்ளார் வெங்கட்பிரபு. இந்த படத்தில் எதற்கும் அஞ்சாத இளம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நாகசைதன்யா.