V4UMEDIA
HomeNewsKollywoodசூரரைப்போற்று பானியில் உருவாகும் விஜயானந்த்

சூரரைப்போற்று பானியில் உருவாகும் விஜயானந்த்

அடிமட்ட நிலையிலிருந்து தங்கள் கனவுகளை நிறைவேற்றி லட்சியத்தை அடைந்து சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது எப்போதுமே ரசிகர்களுக்கு அது சுவாரசியம் தருவதாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் சுயசரிதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் வெற்றியும் கிடைத்தது.

இந்த நிலையில் சில வருடங்களாக கேஜிஎப், காந்தாரா என கன்னட படங்கள் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் மீண்டும் கன்னடத்தில் இதேபோன்று கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘விஜயானந்த் என்கிற படம் தயாராகிவருகிறது.

ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘விஜயானந்த்’. இதில் ‘ட்ரங்க்’ படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காளிதாசா சாகுந்தலா…’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடல் கோபி சுந்தர் இசையில், பாடலாசிரியர் மதுர கவி எழுத, பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள் 1976 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்கு போக்குவரத்து துறையில் இறங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி. ஆர்‌ எல் எனும் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி வருகிறார்களாம்.

Most Popular

Recent Comments