V4UMEDIA
HomeNewsKollywoodமஞ்சிமா மோகனை கைபிடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் ; கௌதம் கார்த்திக்

மஞ்சிமா மோகனை கைபிடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் ; கௌதம் கார்த்திக்

சினிமாவில் பல படங்களில் இணைந்து ஜோடியாக நடித்து பல வருடம் பயணிக்கும் நட்சத்திரங்கள் ஆகட்டும் அல்லது ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் நாயகன் நாயகியாகட்டும் காதலில் விழுவதும் பின்னர் திருமணத்தில் இனிவதும் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம் தான்.

சமீபத்தில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியும் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியும் இதேபோன்று காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே காதலிப்பதாக சொல்லப்பட்டு வந்த நடிகர்கள் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஜோடி தற்போது தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்து உள்ளனர்.

அதுமட்டுமல்ல இருவரும் தங்களுக்குள் காதல் மலர்ந்த விதத்தையும் அது எவ்வளவு உறுதியாக வந்துள்ளது என்பதையும் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதில் கௌதம் கார்த்திக் ஒரு படி மேலே சென்று நாம் ஒன்றாக சேர்ந்து நம் பயணத்தைத் தொடங்குவதற்கு என்னால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் கடந்த 2018ல் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் என்கிற படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர்.

அந்த படத்தில் நடித்ததில் இருந்து இவர்களுக்குள் நாளுக்கு நாள் வளர்ந்த நட்பு காதலாக மாறி விரைவில் திருமணத்தில் ஒன்றுசேர இருக்கின்றனர்.

Most Popular

Recent Comments