கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ஆதார் என்கிற திரைப்படம் வெளியானது ரித்விகா கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் அருண்பாண்டியன் நடித்திருந்தார். இந்த படத்தை அம்பாசமுத்திரத்தில் அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் என்பவர் இயக்கி இருந்தார்.

காவல்துறையால் சாமானியன் எப்படி அலைக்கழிக்கப்படுகிறான் என்பதற்கு உதாரணமாக இந்த படம் வேறு ஒரு வித்தியாசமான கோணத்தில் வெளியாகி இருந்தது.

இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் திருப்திகரமான வசூலையும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சசிகுமார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமாருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த பரிசை தயாரிப்பாளர் சசிகுமார் சார்பாக அவரது மனைவி ராம்ராஜ் பழனி குமாரிடம் வழங்கினார்