V4UMEDIA
HomeNewsKollywood5 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்

5 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்

பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வரலாற்று படங்களை தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய நாவலாக இந்த பொன்னியின் செல்வனை புத்தகமாக வாசித்து பழகிய வாசகர்கள் அனைவருமே ரசிகர்களாக மாறி இந்த படத்தை பார்ப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பார்த்ததுமே இந்த படம் வெளியாகும்போது நிச்சயமாக சோழ சாம்ராஜ்யத்திற்கு சென்று வந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பதை இப்போதே சொல்ல முடிகிறது.

இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர்-30ல் வெளியாவதை தொடர்ந்து தற்போது புரமோஷன் நிகழ்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த வகையில் பட வெளியீட்டுக்கு முன்பாகவே பிரமாண்டம் காட்டி வருகிறது பொன்னியின் செல்வன் படக்குழு.

Most Popular

Recent Comments