அருண்விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சினம். கதாநாயகியாக லாலக் பால்வனி என்பவர் நடித்துள்ளார். இந்த படத்திலும் அருண்விஜய் அதிரடி போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நினைத்தாலே இனிக்கும், காளிதாஸ், வாகா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நீண்ட நாட்கள் கழித்து அவர் இயக்கத்தில் இந்த சினம் படம் வெளியாக இருப்பதால் இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் ஜி என் ஆர் குமரவேலன்.

இதுபற்றி அவர் கூறும்போது வாகா படத்திற்குப் பிறகு எந்த மாதிரியான கதையை உருவாக்குவது என்கிற ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தேன். அப்பொழுது எனது தந்தை ஜி என் ரங்கராஜன் என்னை அழைத்து, காளிதாஸ் படத்தில் ஒரு எமோஷனல் இருந்தது. அதுவே பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைத்தது.

அதேபோன்று எமோஷனலான, குடும்ப ஆடியன்ஸை உள்ளே வரவழைக்கின்ற கதைகள் நிச்சயமாக வெற்றிபெறும் என்று கூறினார். அதை தொடர்ந்து எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அப்படி உருவான படம் தான் இந்த சினம் என்று என்று இந்த படம் உருவான விதம் குறித்து கூறியுள்ளார் இயக்குனர் ஜி என் ஆர் குமரவேலன்.